கொரோனா தொற்றால் மேலும் 39 பேர் பலி!

Corona Death 2
Corona Death 2

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,566ஆக உயர்வடைந்துள்ளது.