கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

kaithu
kaithu

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளில் சுமார் 4 கோடி ரூபா பெறுமதியுடைய கேரள கஞ்சா போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சுமார் 131 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – மாதகல் கடற்பகுதியில் படகொன்றிலிருந்து 101 கிலோகிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அதன் பெறுமதி 30 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர் மேலதிக விசாரணைகளுக்காக இளவாலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.