உள்ளுர் வானூர்தி சேவைகளை விஸ்தரிக்கவுள்ள அரசாங்கம்.

plane
plane

உள்ளுர் வானூர்தி சேவைகளை மேலும் விஸ்தரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து வானூர்தி சேவைத்துறை அமைச்சர் அர்ஜூனா ரணதுங்க தெரிவித்துள்ளார். பலாலி வானூர்தி தளத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி மற்றும் விஸ்தரிப்பு பணிகளை நேரில் கண்டறியும் நோக்கில் அங்கு சென்ற போதே இந்த தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் புதிய சேவைகள் ரத்மலானை வானூர்தி தளத்திலிருந்து மத்தல, பலாலி மற்றும் மட்டக்களப்பு ஆகிய நகரங்களுக்கு இடையே விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அர்ஜூனா ரணதுங்க தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு வானூர்தி சேவைகளை மேற்கொள்வதற்கான முன்னுரிமை இலங்கை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றும் இது தவிர இந்த நிறுவனங்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகள் உட்பட சகல ஒத்துழைப்பினையும் அரசாங்கம் வழங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.