வட மாகாணத்தில் இதுவரை 5,861 பேருக்கு கொரோனா

corona
corona

வட மாகாணத்தில் இதுவரை 5,861 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இதில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகளவானோருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

அந்த மாவட்டத்தில் இதுவரை 3,139 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதுடன் அவர்களில் மே மாதம் மாத்திரம் 1,512 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக வவுனியா மாவட்டத்தில் 887 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 675 பேரும், முல்லைத்தீவில் 599 பேரும், மன்னாரில் 511 பேரும் இதுவரை கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர்.