நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த தீர்மானம்

Parliament
Parliament

நாடு முழுவதும் நடமாட்டத்தடை அமுலில் உள்ள போதிலும் தீர்மானிக்கப்பட்டவாறு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற கூட்டத் தொடர் இடம்பெறும் என படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விவாதம் ஒத்திவைக்கப்பட்டமையினால் அன்றைய தினம் கூட்டத்தொடர் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை எதிர்வரும் 9,10, மற்றும் 11ஆகிய திகதிகளில் நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்துவது தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற செயற்குழு கூடவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் எதிர்வரும் திங்கட் கிழமை  முற்பகல் 9.30 அளவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது என மேலும் தெரிவித்தார்.