வவுனியாவில் கர்ப்பிணி பெண் உட்பட 18 பேருக்கு கொரோனா

Pregnant Woman
Pregnant Woman

வவுனியாவில் கர்ப்பவதி பெண் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று (05) இரவு வெளியாகின.

அதில், சூசைப்பிள்ளையார் குளத்தைச் சேர்ந்த கர்ப்பவதிப் பெண் ஒருவருக்கும், திருநாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும், மகாரம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், தோணிக்கல் பகுதியில் ஒருவருக்கும், ஒமேகா ஆடைத் தொழிச்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கும் என 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா சகாயாமாதாபுரம் பகுதியில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி வவுனியாவில் 18 தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.