வவுனியா சகாயமாதபுரம் முழுமையாக முடக்கம்

IMG 20210605 WA0004
IMG 20210605 WA0004

சகாயமாதாபுரம் பகுதியில் பயண கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டது.

வவுனியா சகாயமாதாபுரம் பகுதியில் கொரோனா தொற்றுநோயாளர்கள் சிலர் அண்மையில அடையாளம் காணப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களுடன் தொடர்புகளை பேணிய பலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்

இதனையடுத்து இன்று (05) காலை குறித்த பகுதிக்குசென்ற வவுனியா சுகாதார பிரிவினர் நிலமை தொடர்பாக ஆராய்ந்ததுடன், கிராமத்திற்குள் உட்பிரவேசிக்கும் முக்கிய வாயில்களில் காவல்துறையினரையும், இராணுவத்தினரையும் கடமையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

அத்தியவசிய தேவையை தவிர்ந்த ஏனையவர்கள் கிராமத்திற்குள் செல்வதற்கும், கிராமத்தில் இருந்து வெளிச்செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.