சுன்னாகம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கந்தரோடையில் கடந்த 2 ஆம் திகதி வீட்டில் இருந்தோரை அச்சுறுத்தி காயப்படுத்தி வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது
யாழ் மாவட்ட சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் தலைமையின் கீழ் இயங்கும் மாவட்ட காவற்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் கடந்த இரண்டாம் திகதி சுன்னாகம் கந்தரோடைபகுதி வீட்டாரை அச்சுறுத்தி இடம்பெற்ற நகை கொள்ளையில் ஈடுபட்ட நால்வரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
இவர்களிடமிருந்து திருடப்பட்ட ஒருதொகுதி நகையினை உருக்கிய நிலையில் மீட்டுள்ளனர்
இவர்களில் இருவர் மிகுதி நகைகளுடன் தலைமறைவாகியுள்ளனர். திருட்டில் ஈடுபட்டவர்கள் 20,26 வயதுடையவர்கள் எனவும் சங்குவேலி மானிப்பாய் , தெல்லிப்பளை பகுதியினை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது .
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரனைக்காக சுன்னாகம் காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் தலைமறைவாகியுள்ள இருவரையும் யாழ்மாவட்ட காவற்துறை புலனாய்வு பிரிவினரும் சுன்னாக காவற்துறையினரும் இணைந்து தேடிவருகிறார்கள்.