சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

dg 27
dg 27

நாட்டில் தற்சமயம் நிலவும் சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக தேவையான நிதி மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக 71 பிரதேச செயலக பிரிவுகளில் 54 ஆயிரத்து 126 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 19ஆயிரத்து 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.