காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத்தேடிய தாய் ஒருவர் மரணம்

596db3d8 d503 4b19 a3d4 ef5331284786
596db3d8 d503 4b19 a3d4 ef5331284786

2009 இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் காணாமல் ஆக்கப்பட்ட செஞ்சுடர் மாஸ்டரின் தாயாரும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேராவின் தாயாரும் ஆகிய தேவகிஅம்மா அவர்கள், புற்றுநோயினால் நேற்று மரணமடைந்துள்ளார்.

வவுனியாவை வசிப்பிடமாக கொண்ட அவர் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக தேடியலைந்திருந்த நிலையில் மகனை காணாமல் மரணமடைந்துள்ளார்.

மகன் பற்றிய நம்பகமான செய்தி அறியாமலும், நீதி மறுக்கப்பட்ட நிலையிலும் இறைபதம் எய்திய தாயாருக்கு தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வவுனியா சங்கத்தினர் தமது இரங்கல் அஞ்சலிகளை தெரிவிப்பதோடு, தாயாரின் குடும்பத்தினரது துயரிலும் கலந்து கொள்கின்றனர்.