மட்டக்களப்பில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நாளை ஆரம்பம்

WhatsApp Image 2021 06 07 at 10.54.55
WhatsApp Image 2021 06 07 at 10.54.55

மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 ஆயிரம் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதில் அபாய நிலையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஏற்றப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று திங்கட்கிழமை (7) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கமைய 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றவேண்டிய கட்டாயமாகும்.

நாளை 25 ஆயிரம் சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளது இதில் அபாய நிலையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மாவட்டத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு காரியாலயங்களில் ஏற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.