மட்டக்களப்பிலுள்ள 14 காவல்துறை பிரிவுகளிலும் உள்ள பிரதேசங்களில் விசேட வீதிச்சோனை நடவடிக்கை இன்று திங்கட்கிழமை (07) காவல்துறைினர் மேற்கொண்டு பயணக்கட்டுப்பாட்டை மீறி பிரயாணித்தவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
இந்த விசேட வீதிச் சோதனை நடவடிக்கை இன்று காலை 6 மணிமுதல் 14 காவல்துறை பிரிவுகளிலும் உள்ள பிரதான வீதிகள் மற்றும் சந்தைபகுதிகள் போன்ற மக்கள் நடமாடும் பகுதிகளில் முக்கிய சந்திகள் காவல்துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் வாகனங்கள், மோட்டர்சைக்கிள்களில் பிரயாணித்தவர்களை நிறுத்தி சோதனையிட்டடு பயணக்கட்டுப்பாட்டை மீறி பயணித்தவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர். அதேவேளை இன்று மக்கள் நடமாட்டம் அதிகமாக மாவட்டத்தில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.