வைத்தியர் என்ற போர்வையில் காரில் ஒருதொகை கஞ்சாவை கடத்திச் சென்ற நபரொருவரை, மருதானைப் பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதன்போது அவரிடமிருந்து 38 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் வைத்தியர் அல்லவென தெரியவந்துள்ளது.