ஓட்டமாவடியில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

01 12
01 12

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.மயூரனின் வழிகாட்டலில் நடைபெற்றது.

அந்த வகையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர்கள், சபையின் செயலாளர் மற்றும் சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், சுகாதார துறையினர் ஆகியோருக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது.

கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதர் ஏ.எல்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.