ஹோமாகம பல்நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான தியகம மலர்சாலையின் முகாமையாளர் உட்பட 7 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் குறித்த மலர்சாலையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கஹதுடுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், மலர்சாலையில் பணிபுரிந்த மேலும் 10 பேர் அங்கு சுயதனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் குறித்த மலர்சாலையின் முகாமையாளருக்கும் சாரதி ஒருவருக்கும் கொவிட் தொற்று உறுதியானது.
இந்த மலர்சாலையில் பணிபுரியும் அனைவரும் ஒரே பாதுகாப்பு உடையை அணிந்து மலர்சாலையில் பணியாற்றிவந்துள்ளதாக விசாரணையின்போது தெரியவந்துள்ளது.