ஓட்டமாவடியில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

01 6 2
01 6 2


ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் நடைபெற்று வருகின்றது. இந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஓட்டமாவடி 2ம் வட்டாரம் மற்றும் ஓட்டமாவடி 3ம் வட்டார பிரிவிலுள்ள அறுபது வயதிற்கு மேற்பட்ட பொது மக்கள் மற்றும் ஓட்டமாவடி சூடுபத்தினசேனையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் மாயானத்தில் கடமையாற்றும் இராணுவத்தினர் ஆகியோருக்கு ஒட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் கொரோனா தடுப்பூசிகள் இன்று புதன்கிழமை ஏற்றப்பட்டது. கொரோனா தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதர் ஏ.எல்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

01 15

அறுபது வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள், பெற்றோர்கள், உறவினர்கள் அனைவரும் தங்களது உயிரினை கொடிய கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக இந்த தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளவும். இந்த தடுப்பூசி தொடர்பில் ஏதும் சந்தேகங்கள் இருப்பின் தடுப்பூசி நிலையத்தில் உள்ள வைத்தியரை அல்லது பொது சுகாதார பரிசோதகரை அனுகி இது தொடர்பான விளக்கங்களை பெற்றுக் கொள்ள முடியும் என ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு 25,000 தடுப்பு ஊசிகள் முதல் கட்டமாக கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த நிலையில் பதினான்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஊடாக தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நா.மயூரனின் வழிகாட்டலில் நடைபெற்று வருகின்றது.

01 16
01 3 1 2