தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 20 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

3121 Person Arrested for Violating Quarantine Rules Ajith Rohana
3121 Person Arrested for Violating Quarantine Rules Ajith Rohana

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,034 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவற்துறை அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.உரிய முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 26,920 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவற்துறை அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.இவர்களில் சுமார் 26 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.