மட்டு வவுணதீவில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இருவர் கைது

WhatsApp Image 2021 06 09 at 19.44.26
WhatsApp Image 2021 06 09 at 19.44.26

மட்டக்களப்பு வுவுணதீவு பிரதேசத்தில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இருவரை இன்று புதன்கிழமை (9) மாலை கைது செய்துள்ளதுடன் இரு துப்பாக்கிகளை மீட்டுள்ளதாக வவுணதீவு காவல்துறையினர் தெரிவித்தனர்.

விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவதினமான இன்று மாலை காவல்துறையினர் வவுணதீவு காவல்துறை பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை மற்றும் நெல்லிக்காடு ஆகிய இரு பிரதேசங்களில் உள்ள வீடுகளை சுற்றிவளைத்து தேடியதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இருவரை கைது செய்ததுடன் இரு துப்பாக்கிகளை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.