பொதுத்தேர்தல் குறித்து ஜனாதிபதி விசேட அறிவிப்பு

Gotabaya Rajapaksa 1 1
Gotabaya Rajapaksa 1 1

எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடாத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

சுவிஸ் தூதரக பெண் பணியாளர் ஒருவர் கடத்தல் விவகாரம் உண்மைக்கு புறம்பானது எனவும், அவ்வாறான ஒரு விடயம் இடம்பெறவில்லை என்பது தொழிநுட்ப சாட்சியங்கள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களும் தலையீடு செய்யாமல் சட்ட நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்பட வேண்டும் என, ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.