தன்னை கைது செய்வதற்காக இடைக்கால தடை விதித்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ராஜித சேனாரத்னவின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெள்ளை வான் கடத்தல்கள் குறித்த தகவல்களை வெளியிட்ட இருவரையும் கைது செய்துள்ள நிலையில் தற்போது ராஜித சேனாரத்னவினையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் இதனை தடுக்கும் வகையில் முன்பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணைகளின் அடிப்படையில் குறித்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.