தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டாலும் கூட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே தளர்த்தப்படும்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் பின்பற்றப்பட வேண்டிய முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பில் இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
பயணத்தடை தளர்த்தப்பட்டதன் பின்னர் மக்கள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய செயற்பட வேண்டும். அத்துடன் கட்டுப்பாடுகளுக்கு அமையவே பயணத்தடை தளர்த்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.