பட்டப்பகலில் வீடு புகுந்து திருடியவர்கள் கைது!

19656e25 052e 4165 b0de c400348c8f92 1
19656e25 052e 4165 b0de c400348c8f92 1

உடுவில் தொம்பை வீதியில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்குள் கதவு கழற்றி உள்ளே புகுந்து நீர்ப்பம்பியைத் திருடி தப்பித்த இருவர் ஊர்மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டனர். ஓட்டுமடத்தைச் சேர்ந்த இருவரே இன்று நண்பகல் பட்டப்பகலில் வீடு புகுந்து நீர்ப்பம்பியைத் திருடி தப்பித்த வேளை சிக்கிக்கொண்டனர்.

10b5d158 ce9d 49c0 bc48 fe8514a7834d

வீட்டின் கதவு கழற்றிவிட்டு உள்ளே புகுந்த இருவரும் நீர்ப்பம்பியைத் திருடிக் கொண்டு தப்பித்த வேளை வீட்டிலிருந்த பெண் கண்டுள்ளார். அவர் குரல் எழுப்பியதால் அயலவர்கள் கூடி திருடர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்தனர். சுன்னாகம் காவற்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த காவற்துறையினர் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.