முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள் இன்று காலை 8 மணிமுதல் 12 மணி வரை பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதோடு 12 மணி முதல் அரை மணித்தியாலம் வைத்தியசாலை முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் உடைய முல்லைத்தீவு உண்ணாப்புலவு, வைத்தியசாலை மல்லாவி வைத்தியசாலை ,புதுக்குடியிருப்பு வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு வைத்தியசாலைகளிலும் குறித்த பணிப் புறக்கணிப்பும் கவனயீர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது