வாரியபொல சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது .
இந்த சம்பவத்தில் கைதி ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் அவர் குருணாகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கைதி ஒருவரால் மற்றொரு கைதியை நோக்கி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று மதியம் 12.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் சிறிய ரக கைத்துப்பாக்கி ஒன்றில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்பு பட்டுள்ள இரு கைதிகளும் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்துள்ளது