முல்லைத்தீவு சாலை பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

21 608410db81ed0
21 608410db81ed0

முல்லைத்தீவு சாலை பற்றைக்காட்டுப்பகுதியில் போரின் போது கைவிடப்பட்ட 15 மோட்டார் குண்டுகள் சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

11.06.21 கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சாலைப்பகுதியில் போரின் போது கைவிடப்பட்ட 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் 14, 81மில்லிமீற்றர் மோட்டார்குண்டு 1 அதற்குரிய வூஸ்டர் ஒன்றும் மீட்கப்பட்டுள்ள.

மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினரால் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட குண்டுகள் தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்து குண்டுகளை செயலிழக்கம் செய்வதற்கான உத்தரவு பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த வெடிபொருட்கள் கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினர் எடுத்து சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.