நாடெங்கிலும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டு விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில் வவுனியாவை சேர்ந்த மூவர் நட்டாங்கண்டல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா புளிதறித்த புளியங்குளத்தை சேர்ந்த இருவரும் செக்கட்டி பிலவு பம்பைமடு பகுதியை சேர்ந்த ஒருவருமாக வான் ஒன்றில் பயணம் செய்த வேளையிலேயே நட்டாங்கண்டல் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்
மேலதிக விசாரணைகளை மல்லாவி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.