புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று இல்லை

received 910136966211850
received 910136966211850

புதுக்குடியிருப்பு காவற்துறை பிரிவிற்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் இருந்து   09.06.21 அன்று இரவு நந்திக்கடலுக்கு தொழிலுக்கு சென்றவரை காணவில்லை என உறவினர்கள் தேடியுள்ள நிலையில் 10.06.21 அன்று மாலை பச்சைப்புல்மோட்டை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

received 324881602409895

இவரது உயிரிழப்பு குறித்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மரணவிசாரணை அதிகாரிகள்,தடையவியல் காவற்துறையினர் ஆகியோர் சடலத்தினை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றுள்ளதுடன் இவரின் உயிரிழப்பு தொடர்பில் மன்றிற்கு அறிக்கையிடுமாறு பணித்துள்ளார்.

received 1062563930816929 1

குறித்த நபர் நந்திக்கடலுக்கு செல்லும் வீதியினை விட்டு பற்றை ஒன்றிற்கு அருகிலேயே சடலமாக காணப்பட்டுள்ளார் இவரது உயிரிழப்பு தொடர்பில் குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளது அங்கு உயிரிழந்தவருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் மரணவிசாரணை அதிகாரியின் அறிக்கையின் பின்னர்  உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பணித்துள்ளார்.

received 390988312235700

இதற்கமைய குறித்த நபரின் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டு சோதனை செய்யப்பட்டதன் அடிப்படையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று பெறுபேறு கிடைக்கப்பெற்றுள்ளது 
இந்நிலையில் இன்று பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது