உர மூட்டைகளை விற்பனை செய்த ஒருவர் கைது

kaithu
kaithu

விவசாய திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஒருவரை நேற்றையதினம் வாரியபொல காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்ட 50 உர மூட்டைகளை தமது சொந்த வியாபார நிலையத்திற்கு எடுத்துச் சென்று குறைந்த விலையில் விற்பனை செய்ததாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.