பயணக் கட்டுப்பாட்டை காரணம் காட்டி அத்தியாவசிய சேவை வழங்குவதாக தெரிவித்து, பாரவூர்தியொன்றில் கஞ்சாவை கடத்திச் சென்ற நபரை கல்கமுவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரான பார்வூர்தி சாரதி 56 வயதான ஒருவரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சந்தேகநபர் மன்னார் பகுதியிலிருந்து கோழி மற்றும் முட்டைகளை கொண்டு செல்வதாகக் கூறி அத்தியாவசிய சேவை உரிமத்தை பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.