கிளிநொச்சி 155 ம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 11 ஆம் திகதி இரவு வேளையில் அடையாளம் காண முடியாத நபர்களினால் வீட்டில் உள்ள பொருட்கள் திருடப்பட்டு சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
குறித்த வீட்டில் இருந்த கதவு, வயர்கள், கம்பிகள் போன்ற பொருட்களை திருடி சென்றுள்ளனர்
இது தொடர்பாக காணி உரிமையாளரால் கிளிநொச்சி காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
இது தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்