முல்லைத்தீவில் குடியிருப்பாளர்களின் விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கை

Untitled 3 copy
Untitled 3 copy

முல்லைத்தீவு மாவட்டத்தில் காவல்துறை பிரிவுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் விபரங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு, காவல்துறை பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், தங்கியிருப்பவர்களின் விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான படிவம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

இவற்றைப் பதிவு செய்து ஒரு மணி நேரத்தில் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கிராமத்தில் வசிக்கும் கிராமவாசி ஒருவர் ஊடாக காவல்துறையினர் இந்த நடவடிக்கையை இன்று ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.