வீதியை கடக்க முற்பட்ட சிறுத்தை விபத்தில் பலியாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் தொண்டமான் நகர் பகுதியில் ஏ 9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான சிறுத்தையின் உடல் காணப்படும் பகுதியை அண்மித்து இரத்தம் காணப்படுவதுடன், சிறுத்தையின் தலைப்பகுதியில் காயங்களும் காணப்படுகின்றது.