மட்டக்களப்பில் வறுமையக் கோட்டில் உள்ள 10 கர்ப்பிணி தாய்மாருக்கான தலா 12 ஆயிரம் ரூபா பெறுமதியான குழந்தை பிறப்பின்போது பாவனைக்கு தேவையான பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை நமக்காக நாம் அமைப்பினர் இன்று (14) மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் வைத்து வழங்கி வைத்தனர்.
குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிப்பாளர் இளையதம்பி உதயகுமார் நமக்காக நாம் அமைப்பின் தலைவர் றமணதாஸ் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள், தாதியர்கள் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மாருக்கான நிவாரணப் பொதியை வழங்கி வைத்தனர்