யாழில் திருமணத்தில் பலர் ஒன்று கூடியதால் 16 பேர் தனிமைப்படுத்தல்

unnamed 6
unnamed 6

குருநகர் பகுதியில், திருமண நிகழ்வொன்றில் அனுமதிக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலானோர் ஒன்று கூடியதால் குறித்த நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே குறித்த தனிமைப்படுத்தல் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, அங்கு விரைந்த யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர், 15 பேருக்கும் அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதை உறுதிப்படுத்தி அவர்களை தனிமைப்படுத்தினர்.

நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 15 பேருக்கு உட்பட்டு திருமணப் பதிவை மேற்கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்திருந்தும், அதற்கு மேலதிகமாக அங்கு பலரும் ஒன்று கூடியதால் தனிமைப்படுத்தியதாக யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளனர்.