தோட்ட தொழிலாளர்களின் பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்படும்

vadivel suresh1
vadivel suresh1

பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட ஏனைய விடயங்கள் அடங்கிய சட்டமூலத்தை உருவாக்கி நாடாளுமன்றத்தில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் ஆணையாளர் உறுதியளித்துள்ளதாக பதுளை நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, தொழில் ஆணையாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் ஆகியோருக்கு இடையில் தேசிய தொழில் ஆலோசனை கூட்டம் இன்று (14) தொழில் அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது இது தொடர்பான உறுதி மொழி அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நடைமுறையில் சாத்தியப்படக்கூடிய விடயங்களை முன்வைக்கவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.