ஹெரோயினுடன் 9 பேர் கைது

kaithu
kaithu

வெலிகம கடற்பரப்பில், கடந்த 13 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 219 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று (14) மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அத்துடன், இந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய மேலும் 2 சந்தேகநபர்கள் கோட்டேகொடை பிரதேசத்தில் வைத்து நேற்று (14) கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.