யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசனை யாழ் மாவட்ட சர்வமத தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

20210615 100335 1
20210615 100335 1

குறித்த சந்திப்பு இன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

20210615 100322 2

இந்த கலந்துரையாடலில், மக்களுக்கான 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை அதிகரித்தல், தற்போதய பயணக்கட்டுப்பாடுகளில் மக்களின் அத்தியாவசிய தேவைகளும் தடைப்படாமல் செல்லுதல், தனிமைப்படுத்தல் மையங்களில் ஏற்படும் அசௌகரியங்களுக்கு தீர்வு கானுதல் மற்றும் விரைவில் தடுப்பூசியை வழங்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகள் அரசாங்க அதிபரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

20210615 100417

சர்வமத தலைவர்களது குறித்த கோரிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் உதவி அரசாங்க அதிபர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.