வாகன இறக்குமதிக்கு திறக்கப்பட்ட கடனீட்டுக் கடிதங்களை ரத்துச் செய்ய தீர்மானம்!

images 1 3
images 1 3

வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக திறக்கப்பட்ட கடனீட்டுக் கடிதங்கள் தொடர்பில் குறித்த நிதி நிறுவனங்களுடன் கலந்துரையாடி அவற்றை ரத்துச் செய்ய நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

கொள்கை தீர்மானங்களோடு எல்லாவற்றிலும் ஒரு செயல்முறை உள்ளது. கடனீட்டுக் கடிதங்கள் திறக்கப்படும் போது மூன்று தரப்பினர் உடன்பாட்டிற்கு வருகின்றனர். இந்த மூன்ற தரப்பினரும் இவற்றை ரத்துச் செய்ய இணக்கம் தெரிவித்துள்ளனர். என்றார்.