விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்டிய பகுதியில் நில அதிர்வு

Untitled 2 copy
Untitled 2 copy

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் தாழ்நில வனப்பகுதியில் சிறியளவான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த அதிர்வானது ரிக்டர் அளவீட்டுக்கருவியில் 1.8 – 2 மெக்னிடியுட் அளவுகளுக்கிடையில் பதிவாகியுள்ளது.

இந்த நில அதிர்வு பசறை, லுனுகல பிரதேசத்திலும் உணரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.