அனுமதிப் பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச்சென்ற ஒருவர் கைது!

IMG 20210618 WA0011
IMG 20210618 WA0011

பயணத் தடை நேரத்தில் அனுமதிப் பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச்சென்ற ஒருவர் யாழ்ப்பாண காவற்துறையினர் கைது செய்யப்பட்டார்.

இன்று காலை கொக்குவில் குளப்பிட்டி சந்தியருகே அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிவந்த ஒருவரையே காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரம் காவற்துறையினர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட அதே வேளை சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.