வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்களை கைது செய்வதற்காக விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்போது சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறை அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை ,கொழும்பிலுள்ள தோட்டப்புறங்கள் மற்றும் தொடர்மாடி குடியிருப்புகளில் ட்ரோன் கமாராக்கள் ஊடாக விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.