யாழ்ப்பாண காவற்துறையினரால் யாழ் நகரப்பகுதியில் உள்ள யாசகர்களுக்கு மதிய உணவுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. நாட்டில் நடைமுறையில் உள்ள பயணத்தடை காரனமாக யாழ் நகரை சூழவுள்ள பகுதிகளில் யாசகம் பெறும் யாசகர்கள் உணவுக்காக கஸ்ரங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
இந்த நிலையிலேயே இன்றையதினம் யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையிலான காவற்துறை உத்தியோகத்தர்கள் உணவில்லாமல் பாதிக்கப்பட்ட யாசகர்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கியுள்ளனர். அத்தோடு நாளைய தினமும் இவ்வாறு உணவுகளை வழங்கி வைப்பதாகவும் காவற்துறையின தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.