இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக எதிர்வரும் சில தினங்களில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படலாம் என இன்றைய தினம் வெளியாகியிருக்கும் பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அனைத்து ஆதாரங்களும், அறிக்கைகளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்படலாம் எனவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.