கடந்த 17ம் திகதி நகரசபை அமர்வில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட சிற்றூழியர்களுக்கு உதவிகள் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை நகரசபை உறுப்பினர் சக்திதாஸ் தனுஸ்காந்தால் முன் வைக்கப்பட்டது.
இதன்போது இதற்கான நிதிமூலங்கள் ஒதுக்கப்படாமை சபையால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து தனது நகரசபை அமர்வுக்கான கொடுப்பனவை சிற்றூழியர்களுக்கான உலருணவுக்காக வழங்குவதாகவும் அது போதாத சந்தர்ப்பத்தில் தன் சொந்த நிதியில் அவ் வேலைத்திட்டத்தினை பூர்த்திசெய்வதாகவும் உறுப்பினரால் தெரிவிக்கப்பட்டது.
இதற்கமைவாக சுகாதாரத்துறையினரிடம் இருந்து பெறப்பட்ட விபரங்களுக்கு அமைவாக தொற்று உறுதி செய்யப்பட்ட 17 சிற்றூளியர்களுக்கும் உலருணவு சகாயமாதாபுரத்தில் இன்று வழங்கப்பட்டது.