நேற்று மாத்திரம் 2,248 பேருக்கு கொரோனா

corona 1
corona 1

நாட்டில் நேற்று மாத்திரம் 2,248 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் 2,169 பேர் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 79 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.

இதையடுத்து, நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 237,661 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து 2,134 பேர் குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி, கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை, 199,393 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் தொற்று உறுதியான 35,788 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.