பயணத்தடை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகளை அரசாங்கமும், சிவில் சமூக அமைப்புக்களும் முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில் தனவந்தர் ஒருவரின் உதவியுடன் மட்டக்களப்பு மயிலங்கரைச்சை கிராமத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் எம்.ஏ.சீ.நியாஸ், ஓட்டமாவடி அரிசி ஆலை உரிமையாளர் சங்க ஆலோசகர் எம்.எம்.ஹலால்தீன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இன, மத வேறுபாடுகள் இன்றி பயணத் தடை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு இவ் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.