உடுவிலில் வீடுகளை உடைத்து திருடிய மூவர் கைது

download 1 31
download 1 31

உடுவிலில் மருத்துவர் உட்பட அரச உத்தியோகத்தர்களின் வீடுகளை உடைத்து திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள், வீட்டுத் தளபாடங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

மூளாய் மற்றும் அளவெட்டியைச் சேர்ந்த மூவரே இன்று இவ்வாறு செய்யப்பட்டுள்ளனர். அரச உத்தியோகத்தர்கள் வீட்டைப் பூட்டிவிட்டு பணிக்குச் செல்லும் வேளையில் பட்டப்பகலில் வீடுடைத்து திருட்டுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு 7 வீடுகள் உடைத்து திருட்டுப் போனமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் கூறினர். யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழான மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.