வவுனியா புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் கிணற்றில் இருந்து 26 வயதான குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் இன்று (20) மாலை அவரது வீட்டில் இருந்துள்ளார். பின்னர் கிணற்றில் சடலமாக மிதந்தமை கண்டறியப்பட்டது.
சடலம் அயலவர்களால் மீட்கப்பட்டு சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக புளியங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.