கட்சித் தலைவர்களுக்கிடையில் விஷேட கலந்துரையாடல் இன்று

SRI LANKA PARLIAMENT e1538031172788 768x384 1
SRI LANKA PARLIAMENT e1538031172788 768x384 1

கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

நாளையும் நாளைமறுதினமும் நாடாளுமன்ற அமர்வை நடத்தும் விதம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இரண்டு நாட்கள் நாடாளுமன்ற அமர்வை நடத்துவதா? அவ்வாறு நடத்தப்படும் பட்சத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் கட்டளை சட்டங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.