கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெலம்பொட காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 80 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் தலங்கம காவல்துறை பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் வீதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனை அடுத்து ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மலாபேயில் வசிக்கும் 29 வயதுடையவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.